/* */

காஞ்சிபுரம் : கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்

குடியரசு தின விழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியினை ஏற்றி  மரியாதை செலுத்தினார்
X

காஞ்சிபுரத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்த கலெக்டர் ஆர்த்தி

நாடு முழுவதும் 73 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் ‌அரங்க மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல் துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வருவாய் துறை, பொதுப் பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை, அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யப்ரியா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம்,கலந்து, உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளின் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டும் நடைபெறவில்லை.

Updated On: 26 Jan 2022 5:00 AM GMT

Related News