/* */

கலைஞருக்கு வெண்கல சிலை: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று தலைவர் மலர்கொடிகுமார் மற்றும் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

கலைஞருக்கு வெண்கல சிலை: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
X

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் மலர்க்கொடிகுமார் மற்றும் எம்எல்ஏ எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.

இன்று காலை நடைபெற்ற காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடிகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் சிற்பி முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 5 முறை தமிழ்நாட்டில் முதலமைச்சராக பதவி வகித்தழரும், 45 வயதில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றும், 12 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் ஆறு சரித்திரம் நாவல்களையும் சமூகம் சார்ந்த 10 நாவல்களையும் உட்பட 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய முரசொலி தினசரி நாளிதழில் உடன்பிறப்பே என்ற தலைப்பில் கடித வடிவில் 7000-திற்க்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய தலைவர், சமுகநீதி காத்த திராவிட தலைவர் இவ்வாறு பொது மக்களின் சேவையில் தனது வாழ்வை அர்பணித்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் மார்பளவு வென்கலசிலை அமைக்கும் பணியை மேற்கொள்ள கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 2 Jun 2022 10:30 AM GMT

Related News