ஈரோட்டில் கரு முட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி

ஈரோட்டில் கரு முட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி

பைல் படம்

Suicide attempt by girl victim in Erode egg case

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கரு முட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், தமிழக அரசு சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவை அமைத்து ஈரோடு சுதா மருத்துவமனை , பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனை , ஓசூர் , ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனை களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆர்.என்‌.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தாங்க வைக்கப்பட்டுள்ள சிறுமி வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டதாகவும், அதற்கு, காப்பக நிர்வாகி நிதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வீட்டிற்கு அனுப்ப முடியாது என கூறப்பட்டதாக தெரிகிறது.இதனால், மன வருத்தத்தில் இருந்த சிறுமி கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் அமிலத்தை குடித்துள்ளார். இதனையடுத்து, காப்பக நிர்வாகிகள் சிறுமியை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story