நம்பியூரில் வரும் பிப்.12ம் தேதி மனுநீதி நாள் முகாம்

நம்பியூரில் வரும் பிப்.12ம் தேதி மனுநீதி நாள் முகாம்
X

னுநீதி நாள் முகாம்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிச்செவியூர், தான்தோன்றி அம்மன் கோவில் வளாகத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

நம்பியூர் அருகே உள்ள கெட்டிச்செவியூர் தான்தோன்றி அம்மன் கோவில் வளாகத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

அரசு மாதந்தோறும் நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் ஈரோடு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, பிப்ரவரி 2025ம் மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் நம்பியூர் வட்டம், சாந்திபாளையம் கிராமம், கெட்டிச்செவியூர், தான்தோன்றி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ராஜம்மாள் திருமண மண்டபத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் அனைத்துத்துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story