/* */

குடியரசு தின விழா: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியேற்றினார்

குடியரசு தின விழா: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியேற்றினார்
X

குடியரசுதினத்தையொட்டி திண்டுக்கல்லில் தேசியக்கொடியேற்றி வைத்த மாவட்ட ஆட்சியர்  விசாகன்.

திண்டுக்கல்லில் 73வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்தார்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் 73வது குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து மூவர்ண பலூன் , சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. அதனை தொடர்ந்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் மருத்துவம், வருவாய், காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் 596 பேருக்கு கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கொரானா நெறிமுறை காரணமாக நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்..

Updated On: 26 Jan 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!