/* */

பாலகிருஷ்ணாபுரம் குளம் அருகே நீரில் மூழ்கிய நிலையில் வாலிபர் சாவு

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் குளம் அருகே தலையில் அடிபட்டு நீரில் மூழ்கிய நிலையில் வாலிபர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பாலகிருஷ்ணாபுரம் குளம் அருகே நீரில் மூழ்கிய நிலையில் வாலிபர் சாவு
X
உயிரிழந்த தெய்வசிகாமணி புரத்தைச் சேர்ந்த சோட்டு (எ) சதீஸ்.

திண்டுக்கல் அனுமந்த நகர் பாலகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் ராஜலட்சுமி நகர் அருகே உள்ள குளக்கரை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் இருந்தது.

தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்ட் அருண் கபிலன்,தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தெய்வசிகாமணி புரத்தைச் சேர்ந்த சோட்டு (எ) சதீஸ் (வயது 32) என்பதும் சென்ட்ரிங் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோட்டு தலை பகுதியில் அடிபட்டு ரத்த காயங்கள் இருப்பதால் இவர் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்தாரா அல்லது யாராவது தாக்குதல் நடத்தி கொலை செய்து உள்ளார்களா என்ற கோணத்தில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Jan 2022 9:17 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!