தர்மபுரி மாவட்டத்தில் 2வது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.
HIGHLIGHTS
தர்மபுரி வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் பாலு தலைமையில் நடந்தது. வழக்கறிஞர் தர்மன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கொரோனோ தொற்று எதிரொலியாக தர்மபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறைகள் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். மானாமதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் குரு முருகானந்தத்தை அவரது அலுவலகத்தில் வைத்து சில ரவுடிகள் அறிவாளால் வெட்டி உள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும், இன்று 7ம் தேதியும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று தர்மபுரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர் .இன்று 7ம் தேதியும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.