Begin typing your search above and press return to search.
பெட்ரோல், டீசல்,விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் எஸ்.கே.பி.பி கோபி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்தும், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், கோஷங்களை எழுப்பினர். இதில், மக்கள் நீதிமயம் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.