செங்கல்பட்டு வேம்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணி துவக்கி வைத்த கலெக்டர்
செங்கல்பட்டு வேம்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணியை கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம், வேம்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணிகளை செங்கல்பட்டு கலெக்டர் ஆ. ராகுல்நாத் துவக்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலவும் வறட்சியின் காரணத்தினால் ஏரி மற்றும் நீர்நிலைகள் போதிய நீரின்றி குறைந்த நீரின் அளவிலேயே காணப்படுகிறது.
இச்சூழ்நிலையை பயன்படுத்தி, நீர்நிலைகளை தூர்வாரி, அதன் கொள்ளவை அதிகப்படுத்தி, வருங்காலத்தில் குடிநீர் மற்றும் விவசாயப் பணிகளை மேம்படுத்திட தூர்வாரும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டு, விவசாயிகள் மற்றும் மக்கள் பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெருகிவரும் நீர்த்தேவையை சமாளிக்க மழைநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டியது அவசியமாகிறது. இதே போன்று மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என கலெக்டர் ஆ.ராகுல்நாத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வாளர்ச்சித்துறை முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், செயற்பொறியாளர் கவிதா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.