கேபிள் வயர் அறுந்து விழுந்து ரயில் சேவை பாதிப்பு
ஊரப்பாக்கம் ரயில்நிலையம் அருகே, செங்கல்பட்டு-தாம்பரம் ரயில் வழித்தடத்தில் ஓவா் ஹெட் கேபிள் வயர் அறுந்து விழுந்ததால் இரயில் சேவை பாதிப்பு அடைந்தது.
செங்கல்பட்டு மாவட்டம்ஊரப்பாக்கம் ரயில்நிலையம் அருகே ரயில் வழித்தடத்தில் ஓவா் ஹெட் கேபிள் வயர் அறுந்து விழுந்தது. இதனால் சென்னை எழும்பூருக்கு வரவேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் செங்கல்பட்டு அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதைப்போல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருமால்பூா் ஆகிய இடங்களிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
இதனால் காலை நேரங்களில் அலுவலகம் மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே உள்ள ரயில் நிலையங்களில் தவித்தனர். தாம்பரம்,செங்கல்பட்டு ஆகிய ரயில்நிலையங்களிலிருந்து ரயில்வே மின்பொறியாளா்கள் விரைந்து வந்து பழுதை சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.