/* */

மது குடிக்க பணம் தராத மனைவிக்கு கத்திக்குத்து

மது குடிக்க பணம் தராத மனைவிக்கு கத்திக்குத்து
X

செங்கல்பட்டில் மது குடிக்க பணம் தராத மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு பவானி நகரைச் சேர்ந்தவர் சுமதி (44). செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் அகிலன் வெளிநாட்டில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு வேலை ஒப்பந்தம் முடிந்து தனது சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு வந்துள்ளார்.இந்நிலையில் அகிலனுக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருப்பதாகவும் இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதனால் பவானி நகரில் இருந்து அண்ணா நகர் 4வது குறுக்கு தெருவிற்கு சுமதி மற்றும் அவரது மகன் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவர் தொடர்ந்து மனைவியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அகிலன் தனது மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் சுமதியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . மேலும் இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 March 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு