Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அரங்கத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நடைபெற்றது.
தொழுநோய் விழிப்புணர்வு பேரணி இரு வார இயக்கத்தின் சிறப்பு நிகழ்வாக இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் தலைமையில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டு, தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு ஆட்சியர் பேசியதாவது:- தொழுநோய் முற்றிலும் குணமாகக் கூடியது. ஆரம்ப நிலை சிகிச்சை உடல் மாற்றங்கள் ஏற்படுவதை தடுக்கும், இது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.