தமிழ்நாடு ஆரிய வைஸ்ய மகாசபா சார்பில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
அரியலூரில் தமிழ்நாடு ஆரிய வைஸ்ய மகாசபா சார்பில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழ்நாடு ஆரிய வைஸ்ய மகாசபா சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அரியலூர் வாசவி மஹாலில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், கடை வியாபாரிகள், கடைஊழியர்கள், தமிழ்நாடு ஆர்ய மகா சபா உறுப்பினர் ஆகியோருக்கு கொரோனா முதல் தடுப்பூசி மற்றும் இரண்டாம் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இப்பணியில் பூச்சியியல் வல்லுனர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வே.அருண்பிரகாஷ், சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திகேயன், விக்னேஸ்வரன், செவிலியர் யமுனா ஆகியோர் பங்கு கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய கடுகூர் வட்டாரத்தின் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ஸ்மித் சைமனுக்கு பொன்னாடை மற்றும் நினைவு பரிசாக வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சிறப்பு முகாமில் 54 நபர்களுக்கு பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.