Begin typing your search above and press return to search.
அரியலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தனியார் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் சார்பில், கடந்த 3ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, தொலைக்காட்சி நிறுவனத்தை தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கியவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். செய்தியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில் மாவட்டத்திலுள்ள செய்தியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் மனு அளித்தனர்.