அருங்காட்சியக சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர் சிவசங்கர்
Minister Sivasankar laid the foundation stone for the perimeter wall of the museum
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், வாரணவாசி புதைப்படிம அருங்காட்சியகத்தில் ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் வடக்குப்புற சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேலும், இந்த அருங்காட்சியகத்தின் 17.28 ஹெக்டேர் மொத்த பரப்பளவில் 2145.60 மீட்டர் சுற்றுச்சுவர் கட்ட அனுமதி பெறப்பட்டு, இதில் முதற்கட்டமாக 725 மீட்டர் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்றினை நட்டு, அருங்காட்சியகத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.