Begin typing your search above and press return to search.
செந்துறையில் சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
செந்துறை ஊராட்சி மன்ற வளாகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் புதிய வட்டாட்சியர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறை முதல்நிலை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று ஏப்ரல் 14 ந்தேதி சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த தினம் தமிழக அரசு வழிகாட்டுதல் படி சமத்துவ நாளாக ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு புதிய வட்டாட்சியராக பொறுப்பேற்கும் துரை மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஊராட்சி உறுப்பினர் சேகர், பட்டாத்தாள் ராஜேந்திரன் செல்வம்கலையரசி, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கடம்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் செ.வெ.மாறன், மாவட்ட அமைப்பாளர் செல்லமுத்து ஓய்வுபெற்ற ஆசிரியர் குப்புசாமி மற்றும் தூய்மை பணியாளர்கள் தூய்மைகாவலர்கள் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினர். பொதுமக்கள் அனைவருக்கும் ஊராட்சி தலைவர் இனிப்புகள் வழங்கினார்.