/* */

ஆழ்துளை கிணறு அமைக்க அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் பங்குத்தொகை

ஆழ்துளை கிணறு அமைக்க அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் தனியார் நிறுவனம் சார்பில் பங்குத்தொகை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆழ்துளை கிணறு அமைக்க அரியலூர் மாவட்ட  கலெக்டரிடம்  பங்குத்தொகை
X

அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்க பங்கு தொகை வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை அமைப்பதற்கு பங்குத்தொகைகளை அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தினர் மாவட்ட கலெக்டர்பெ.ரமண சரஸ்வதியிடம் வழங்கினார்கள்.

அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம், ரெட்டிப்பாளையம் மற்றும் ஆலந்துரையார் கட்டளை ஆகிய ஊராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 2021-2022ஆம் ஆண்டிற்கு ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் அமைப்பதற்கு 50 சதவீதம் பொதுமக்கள், நிறுவன பங்குத்தொகை ரூ.18.45 இலட்சம் வங்கி வரைவோலையினை அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் க ஆலைத்தலைவர் சிவராஜ் வரதராஜன் வழிகாட்டுதலின்படி, ஆலைதுணைத்தலைவர் சுனந்தாபாசு, சுரங்க பொதுமேலாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்குத்தொகையினை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். மனிதவளத்துறை துணைத்தலைவர் முனைவர் சந்தானபாரதி, தொழிலாளர் உறவுத்துறை உதவிபொதுமேலாளர் தனஞ்செயன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.

Updated On: 25 March 2022 9:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு