ஆழ்துளை கிணறு அமைக்க அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் பங்குத்தொகை
ஆழ்துளை கிணறு அமைக்க அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் தனியார் நிறுவனம் சார்பில் பங்குத்தொகை வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை அமைப்பதற்கு பங்குத்தொகைகளை அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தினர் மாவட்ட கலெக்டர்பெ.ரமண சரஸ்வதியிடம் வழங்கினார்கள்.
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம், ரெட்டிப்பாளையம் மற்றும் ஆலந்துரையார் கட்டளை ஆகிய ஊராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 2021-2022ஆம் ஆண்டிற்கு ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் அமைப்பதற்கு 50 சதவீதம் பொதுமக்கள், நிறுவன பங்குத்தொகை ரூ.18.45 இலட்சம் வங்கி வரைவோலையினை அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் க ஆலைத்தலைவர் சிவராஜ் வரதராஜன் வழிகாட்டுதலின்படி, ஆலைதுணைத்தலைவர் சுனந்தாபாசு, சுரங்க பொதுமேலாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்குத்தொகையினை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். மனிதவளத்துறை துணைத்தலைவர் முனைவர் சந்தானபாரதி, தொழிலாளர் உறவுத்துறை உதவிபொதுமேலாளர் தனஞ்செயன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.