திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Update: 2021-11-27 01:01 GMT

 மாவட்ட ஆட்சியர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனை தொடர்ந்து மாணவர்கள் நலன் கருதி, திருவண்ணாமலை  மாவட்டத்தில் இன்று (27/11/2021) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News