மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்
திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு அடையாள அட்டை புதிதாக பெறுவதற்கும், புதுப்பித்துக் கொள்ளவும் விண்ணப்பித்தனர்.
சிறப்பு மருத்துவர்கள் மூலம் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் தகுதியானவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது