திருவண்ணாமலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2022-12-24 07:18 GMT

திருவண்ணாமலையில் திமுக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பகுத்தறிவு பகலவன் என அழைக்கப்படும் தந்தை பெரியாரின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட.திமுக சார்பில், திருவண்ணாமலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் நேரு, பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், திமுக மற்றும் தி.க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செங்கம் பகுதியில் பெரியார் நினைவு தினம்:

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 49 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் உள்ள தந்தை பெரியார் திருஉருவ சிலைக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான கிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News