இருசக்கர வாகன விபத்து: லாரியில் சிக்கி தாெழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகன விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-05-21 07:29 GMT

திருவண்ணாமலை தாலுகா மங்கலம் அருகே தெள்ளானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நமச்சிவாயம் (வயது 40), கூலி தொழிலாளி. இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் சாலை கூட்ரோடு வழியாக மருத்துவக்கல்லூரி நோக்கி புறவழிச்சாலையில் சென்றார். திண்டிவனம் கூட்ரோடு அருகில் செல்லும் போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்வதற்காக லாரியின் வலதுபுறம் வழியாக சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலைத்தடுமாறி நமச்சிவாயம் அவரது இடது பக்கத்தில் சரிந்து விழுந்தார். இதில் அவர் லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நமச்சிவாயத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News