மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-04-09 15:52 GMT

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த பேருந்து  நிலையம் அருகில் அறிவொளி பூங்கா எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை தென்கிழக்கு மாவட்ட செயலாளர் தாரா அருள், வடகிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை செயலாளர் சுகானந்தம், மணிவேல், பொருளாளர் ராஜ்குமார், நகர செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் பெட்ரோல், டீசல், எரிவாயு  விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சொத்துவரி 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதை திரும்ப பெற வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது பெண்கள் விறகு அடுப்பில் பற்ற வைத்து சமையல் செய்வது போன்று செய்து காண்பித்து காலி எரிவாயு  சிலிண்டர்களை கட்டி பிடித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சக்திதினகரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News