வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்

திருவண்ணாமலையில் வெப்ப அலை வீசும் நேரத்தில், பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2024-04-24 02:28 GMT

கலெக்டர் பாஸ்கர பாண்டியன்.

வெப்ப அலை வீசும் மாவட்டங்களில் திருவண்ணாமலையில் ஒன்று என்பதால் மாவட்டத்தில் உள்ள மக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில்,

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர் ,   திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ,காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ,சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர் ,கோயம்புத்தூர்,   ஈரோடு,  கரூர்,  திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீச கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும் , அத்யாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடு மாறும் வெயிலின் தாக்கத்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,

எனவே வெப்ப அலை வீசும் மாவட்டங்களில் திருவண்ணாமலையில் ஒன்று என்பதால் மாவட்ட மக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News