திருவண்ணாமலைக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் எ வ.வேலு

திருவண்ணாமலை குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ 5,700 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் வேலு கூறினார்

Update: 2022-02-14 06:39 GMT

 பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு  

திருவண்ணாமலை நகரின் குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்க ரூபாய் 5,700 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்ட இருக்கிறார் என்று  பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் பேசுகையில்,  திருவண்ணாமலை நகரில் தடையின்றி குடிநீர் கிடைக்க காரணம் திமுக அரசுதான், நான் அமைச்சராக இருந்தபோது மூன்றாவது கூட்டுக் குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பின்பு வந்த ஆட்சியாளர்கள் அதனை செய்து முடிக்காத காரணத்தினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு விரைவில் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

மேலும் 10 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பேருந்து நிலையம் திருவண்ணாமலையில் அமைய உள்ளது,  அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். மாட வீதி முழுவதும் கான்க்ரீட் சாலைகள் அமைத்து தரப்படும். என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் எம்பி அண்ணாதுரை, மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், கார்த்திக் வேல்மாறன் , டி.வி.எம்.நேரு, கமலேஷ் குமார், பிரியா விஜயரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News