குப்பைகளை தரம்பிரித்து தர நகராட்சி அதிகாரி அறிவுரை

நகராட்சி தூய்மை பாரத திட்டம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் சந்திரா துவக்கி வைத்தார்.

Update: 2021-09-30 08:33 GMT

திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் சந்திரா.

திருவண்ணாமலை நகராட்சி தூய்மை பாரத திட்டம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் சந்திரா துவக்கி வைத்தார். அவர் பேசும்போது பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மட்கும் குப்பை,  மட்காத குப்பை என தரம் பிரித்தல்,  பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் தூய்மை அருமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம்,  நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட்,  நகர நல அலுவலர் மோகன் குமார், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News