டி.ஜெயக்குமாருடன் அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சந்திப்பு

டி.ஜெயக்குமாருடன் அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சந்திப்பு

Update: 2022-03-17 05:03 GMT

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சால்வை அணிவித்தார் திருச்சி அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணை செயலாளர் தாமரைச்செல்வன்.

அ‌.தி.மு.க.முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்றில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.இந்நிலையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்துள்ள அவரை அ.தி.மு.க. தொண்டர்கள் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து சால்வை அணிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ஆர்.தாமரைச்செல்வன் ஜெயக்குமாருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News