திருமண வரவேற்பு விழாவில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் துணிப்பை

திருச்சியில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது.

Update: 2022-08-29 10:32 GMT

திருச்சியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு விழாவில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது.

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் 1988 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட போது இயக்கத்தில் சேர்ந்து மிகவும் சிறப்பாக செயல்பட்ட பண்பாளர்கள், சுமார் 34 வருடத்திற்கு முன்பு திருச்சி பல சமூக சேவை செய்தவர்கள், பலர் வேலை காரணமாக பிரிந்தவர்கள் ஒரு திருமண வரவேற்பு நிகழ்வில் ஒன்று சேர்ந்து துணிப்பை இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

இதில் மக்கள் சக்தி இயக்க   மாநில நிர்வாகிகள் கே.சி. நீலமேகம், பி.கிருஷ்ணன், சி.தங்கவேல், எம்.ரவிச்சந்திரன், வெ.இரா.சந்திரசேகர், ஆர்.வாசுதேவன், விஜயகுமார், ஆர்.இளங்கோ, எம்.சத்தியசீலன், டி.கெளரிபாய், டி.சண்முகசுந்தரம், ராமேஷ்வரன், தங்கராஜ், ஆகியோர் 34 வருடங்கள் பிறகு ஒன்றிணைந்து துணிப்பை வழங்கினார்கள்.

Tags:    

Similar News