வியாபாரி பைக்கில் ரூ.1.58 லட்சம் பணம் திருடிய வாலிபர் கைது

Update: 2021-04-16 08:30 GMT

தூத்துக்குடியில் மீன் வியாபாரி பைக்கில் வைத்திருந்த பணம் ரூ.1.58 லட்சத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி பூபால்ராயர்புரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் கோமஸ் (62), மீன் வியாபாரியான இவர் கடந்த மாதம் 30ம் தேதி மீன்களை ஏலம் எடுப்பதற்காக, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மோட்டார் பைக்கில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 58ஆயிரம் பணம் திருடு போனது.

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீசாரின் விசாரணையில், தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த ரோசாரி மகன் ஏத்தேல்பத் (32) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.1லட்சத்து 58 ஆயிரம் பணத்தை மீட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News