வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரே ஏற்றுமதியில் 77.50 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை

Update: 2021-06-14 17:00 GMT

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரே ஏற்றுமதியில் 77.50 மீட்டர் அதிக நீளம் கொண்ட 24 மிகப்பெரிய காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

199.9 மீட்டர் நீளம் உடைய 'எம்.வி. பேக் அல்கோர்' என்ற கப்பல் கடந்த 10-ந்தேதி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலின் ஹைட்ராலிக் பளுத்தூக்கி இயந்திரங்கள் மற்றும் துறைமுகத்தின் நகரும் பளுத்தூக்கி இயந்திரங்கள் மூலம் 77.50 மீட்டர் நீளம் உடைய 24 காற்றாலை இறகுகளும் பாதுகாப்பான முறையில் கையாளப்பட்டது. இக்கப்பலின் சரக்குகள் முழுவதும் மூன்று அடுக்குகளாக ஏற்றப்பட்டு, பின்பு வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து 13-ந்தேதி அமெரிக்காவின் அரன்சாஸ் துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது.

இந்த காற்றாலை இறகுகள் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வரை பிரத்தியோக லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு பின்னர், கப்பலில் ஏற்றப்பட்டது. இதற்கு முன்பு ஒரே ஏற்றுமதியில் 74.90 மீட்டர் நீளம் உடைய 84 காற்றாலை இறகுகளை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்டதே சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது 77.50 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகுகளை கையாண்டு மூலம் இதற்கு முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இந்த நிதியாண்டு ஜீன் மாதம் வரை 423 காற்றாலை இறகுகள் மற்றும் கோபுரங்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 4462 காற்றாலை இறகுகள் மற்றும் கோபுரங்கள் கையாளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News