Tuticorin Police Training SP Inspection தூத்துக்குடியில் காவல் துறையினருக்கான கவாத்து பயிற்சி: எஸ்.பி. நேரில் ஆய்வு

Tuticorin Police Training SP Inspection தூத்துக்குடி உட்கோட்ட காவல்துறையினரின் கவாத்து மற்றும் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-11-25 06:23 GMT

தூத்துக்குடி உட்கோட்ட காவல்துறையினரின் கவாத்து மற்றும் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tuticorin Police Training SP Inspection

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

அதுமட்டுமின்றி காவல் துறையினர் தவறாமல் கவாத்து மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுரை வழங்கினர். இதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கவாத்து மற்றும் உடற்பயிற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலைய போலீசாரின் கவாத்து மற்றும் உடற்பயிற்சி இன்று காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச் பூங்கா முன்பாக நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டனர்.

இந்த கவாத்து மற்றும் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவர் தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அது குறித்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினரிடம் உறுதி அளித்தார். இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் உடனிருந்தார்.

Tags:    

Similar News