தூத்துக்குடி மருத்துவமனை - ஆக்ஸிஜன்படுக்கை,செவிலியர் பற்றாக்குறை ஏற்படாத நிலையை உருவாக்க பணியாற்றுவேன்-மருத்துவமனை புதிய டீன்

தூத்துக்குடி அரசு மருத்துவமனை புதிய முதல்வராக டி.நேரு பொறுப்பேற்றுக்கொண்டார்.தொடர்ந்து மருத்துவமனை ஆய்வுகளை மேற்கொண்டார்

Update: 2021-05-26 08:29 GMT

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வர் டி.நேரு. 

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக டி.நேரு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேற்கொண்டார்.

பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அனைவருக்கும் சிறந்த சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படும்

கொரோனா தொற்றால்   பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு தொண்டு நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்கள் வழங்க வழங்கிவருகிறது. தொடர்ந்து, இதுபோன்ற உதவிகளை செய்ய முன்வரவேண்டும். தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன்‌ படுக்கை பற்றாக்குறை மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்க பணியாற்றுவேன்.

இரண்டாம் அலை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2-வது நாளே நுரையீரல் பாதிக்கப்படுவதால் சிகிச்சை பலனின்றி நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. தற்போது, சராசரியாக நாளொன்றுக்கு 2 பேர் கொரோனாவால் இறக்கின்றனர். இறப்புகளே இல்லாத நிலையை உருவாக்குவது 100 சதவீதம் சாத்தியமற்றது. எனினும் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அனைத்தும் முயற்சிகளும் எடுக்கப்படும் என்றார். பேட்டியின் போது அரசு மருத்துவர்கள் பாவலன், குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News