தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்து இளம்பெண் பலி :- சகோதரர் படுகாயம்

அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது கான்கிரீட் மேற்பூச்சு திடீரென இடிந்து விழுந்து இளம்பெண் பலி

Update: 2021-06-01 04:09 GMT

தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்து இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சகோதரர் காயமடைந்தார்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7வது தெருவில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ராஜமுருகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறார். இவரது மகள் பரமேஸ்வரி (22), பிஇ முடித்துள்ளார். மேலும், அந்தோணியார் புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். மகன் சுந்தர் (21) கல்லூரி இறுதியாண்டு படித்து வருகிறார்.


நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது கான்கிரீட் மேற்பூச்சு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடை்நத பரமேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் சுந்தர் படுகாயமடைந்தார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். வீடு இடிந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News