பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-06-12 07:25 GMT

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்

தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வரலாறு காணாத பெட்ரோல், டிசல் விலை உயர்வைக் கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும் தூத்துக்குடி சிதம்பர நகரில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாநகர செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தார்.

இதில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டக்குழு குமாரவேல் , ஒன்றியச்செயலாளர் சங்கரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் முத்து, மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், முத்துகிருஷ்னன், தசலிஸ் மற்றும் நாகராஜ், டென்சிங், செல்வம், காஸ்ட்ரோ, ஜேம்ஸ், பாலா, ஆவடையப்பன், முருகன், அலாய்சிஸ், நாகராஜன்,  தாமோதரன், வரதன், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News