தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசார்- எஸ்பி பாராட்டு

சட்டமன்ற தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய 58 தனிப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Update: 2021-06-10 14:52 GMT

தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் நடைபெறா வண்ணம் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் 8 பேர் உட்பட 58 தனிப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


இதில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் தூத்துக்குடி நகரம் ஞானராஜன், தூத்துக்குடி ஊரகம் நம்பிராஜன், திருச்செந்தூர் கார்த்திகேயன், ஸ்ரீவைகுண்டம் ஜெகநாதன், மணியாச்சி முருகானந்தம், கோவில்பட்டி ஸ்டீபன், விளாத்திகுளம் சேகர், சாத்தான்குளம் கந்தசாமி உட்பட 58 தனிப்பிரிவு போலீசார் பாராட்டுச் சான்றிதழ் பெற்றனர்.

இந்த நிகழ்வின்போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் கிறிஸ்டி, உமையொருபாகம் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News