தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று, மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 17 போ் குணமடைந்துள்ளனர்.

Update: 2021-09-15 14:15 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது.

இன்று, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 17 போ் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 401 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 110 போ் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News