கந்துவட்டி கேட்டு மிரட்டினால் குண்டர் சட்டம் பாயும் : எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை!

கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் - எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை.

Update: 2021-07-21 13:26 GMT

தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பலர் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு கடன் கொடுத்த நபர்கள், கடன் பெற்ற பொதுமக்களை தற்கொலை செய்யத் தூண்டும் வகையில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துவருவதாகவும், இதே போன்று பல தனியார் நிறுவனங்களும் செயல்படுவதாக தகவல்கள் வருகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கொடுத்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி மத்தியபாகம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடிவருகின்றனர். ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் பொதுமக்களை கடன் கேட்டு நெருக்கடி கொடுத்து துன்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்கள். பொதுமக்களின் உயிருக்கும், அவர்களது உடமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டியது காவல்துறையின் தலையாய கடமையாகும். இதுபோன்று கடன் பெற்ற பொதுமக்களிடம் சட்டவிரோதமாக கந்து வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்து, அவதூறான வார்த்தைகளில் பேசி மிரட்டல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும், மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

Similar News