வெங்கடேச பண்ணையார் நினைவு தினம்: தூத்துக்குடியில் சமக மரியாதை செலுத்தினர்

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் வெங்கடேச பண்ணையார் 18 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

Update: 2021-09-26 08:36 GMT

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் "அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் வெங்கடேச பண்ணையார்"18 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டிலுள் அமைந்துள்ள சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து வெங்கடேச பண்ணையார் உருவப்படத்திற்கு சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணிபிச்சை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப், ரெக்ஸ், மாவட்ட பிரதிநிதி பழனிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் சதாசிவம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு, முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன், மாநகரச் செயலாளர் உதயசூரியன், நகர அவைத்தலைவர் மதியழகன், மாநகர துணை செயலாளர் மணிகண்டன் மற்றும் சமத்துவ மக்கள் கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News