ஸ்டெர்லைட் ஆலையில் 10.50 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி- ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று (09.06.2021) மாலை 6.00 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2021-06-09 17:12 GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று (09.06.2021) மாலை 6.00 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, மேற்படி ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இன்று (09.06.2021) மாலை 6.00 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது. இதில், 6.50 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கும், 4.00 மெட்ரிக் டன் பெராக்கா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News