தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-22 14:27 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று, புதியதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் மாவட்டத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 போ் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 209 ஆக அதிகரித்துள்ளது. இன்று, மாவட்டத்தில் உயிரிழப்பு இல்லை. எனினும் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தம் 401 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News