வருகிற 22-ம் தேதி தூத்துக்குடியில் வங்கி கடன்களுக்கான சிறப்பு முகாம்

தூத்துக்குடியில் வங்கி கடன்களுக்கான சிறப்பு முகாம் வருகிற 22-ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2021-10-20 07:59 GMT

தூத்துக்குடியில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பல்வேறு வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் லோன் மேளா, எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள ஏ.வி.எம். கமலவேல் மஹாலில், வருகிற 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.

இதில், விவசாயக் கடன், பிரதமர் முத்ரா கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், சிறு, குறு தொழில் கடன், மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களான பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா, போன்ற திட்பங்களில் இணைந்து பயன் பெறுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News