தூத்துக்குடிமாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக ரூ.1லட்சம் அபராதம் வசூல்

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சம் அபராதத்தை போலீசார் வசூலித்தனர்.

Update: 2021-05-29 06:14 GMT

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா ரூ. 200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு தலா ரூ.500 அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 111 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 47 பேர், திருச்செந்தூர் 45 பேர், ஸ்ரீவைகுண்டம் 40 பேர், மணியாச்சி 55 பேர், கோவில்பட்டி 84 பேர், விளாத்திகுளம் 51 பேர் மற்றும் சாத்தான்குளம் 28 பேர் என மொத்தம் 461 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.92,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி கடைப்பிடிக்காத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 9 பேர், தூத்துக்குடி ஊரக உட்கோட்டம், திருச்செந்தூர் தலா ஒருவர் மீதும், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் தலா 3 பேர், மணியாச்சி 2 பேர், கோவில்பட்டி 5 பேர் மற்றும் சாத்தான்குளம் 4 பேர் என மொத்தம் 28 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.14,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு என மொத்தம் ரூ. 1,06,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News