தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று, 9 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-16 14:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று, மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 14 போ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 654 ஆக அதிகரித்துள்ளது. இன்று, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 14 போ் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 148 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News