தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 87 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்

மாநகராட்சி சார்பில் 87 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்: ஆணையர் சாருஸ்ரீ நேரில் ஆய்வு.

Update: 2021-09-26 08:41 GMT

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமை ஆணையர் தி.சாருஸ்ரீ இ.ஆ.ப. இன்று நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் செப்.26ம் தேதி இன்று மாநகராட்சிக்கு உட்பட்ட 87 இடங்களில் கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சரியாக 8 மணியளவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கணேஷ் நகர், சில்வர்புரம், போல்டன்புரம், இனிகோ நகர், ராஜபாண்டிநகர் உள்ளிட்ட 87 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் துவக்கியது.

இம்முகாம் நடைபெறும் இடங்களில் ஆணையர் தி.சாருஸ்ரீ இ.ஆ.ப. ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி நல அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் உடனிருந்தனர். இம்முகாம் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் தவறாமல் தங்கள் வீட்டின் அருகிலேயே நடைபெறும் இதுபோன்ற முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்தே பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News