தூத்துக்குடி அங்கன்வாடி மைய கட்டிடத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்

ரூ.33.4 லட்சம் மதிப்பில் தூத்துக்குடியில் அங்கன்வாடி மைய கட்டிடம் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

Update: 2021-09-26 08:31 GMT

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.33.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தினை கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் மாநகராட்சிக்குட்பட்ட சுப்பையா பூங்கா பகுதியில் மாநகராட்சி சீர்மிகு நகர அபிவிருத்தம் திட்டத்தின் கீழ் ரூ.33.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் இன்று (25.09.2021) திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியி்ல் கனிமொழி எம்பி பேசுகையில்: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வளரும் குழந்தைகள் சிறு வயதிலேயே கல்வியாற்றலில் சிறந்து விளங்கும் வகையில் குழந்தைகளுக்கு மதிய ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்கும் வகையில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் தலா ரூ.16.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தினை இன்றைய தினம் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சிறு குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ண சுவர்களில் வர்ணங்களால் கணிதம், அறிவியல், விளையாட்டு சார்ந்த குறியீடுகள், சிறு குழந்தைகள் அமர்வதற்க வர்ணம் பூசப்பட்ட நவீன இருக்கைகள், நவீன மயமாக்கப்பட்ட வருகை பதிவேடு, கணிணி வசதி ஆகியவை அமைக்கப்பட்டு குழந்தைகள் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ளது. மேலும் எதிர் வரும் காலங்களில் அனைத்து சந்ததியினரும் படித்து முன்னேறும் வகையில் இந்த அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களின் எதிர்காலத்தை நல்லவிதமாக அமைத்து கொடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து சமுதாயத்தில் உயர் நிலையில் உள்ள நல்ல உத்யோகத்தில் இருக்க வாய்ப்பாக அமையும். தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (சமூக நலத்துறை) தனலட்சுமி, உதவி பொறியாளர் சரவணன், முக்கிய பிரமுகர் ஜெகன் பெரியசாமி, ஜீவன் மற்றும் அலுவலர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News