தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 52 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்த 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-20 07:24 GMT

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

தூத்துக்குடி வடபாகம், மத்தியபாகம், தென்பாகம், தாளமுத்துநகர், முத்தையாபுரம், புதுக்கோட்டை, முறப்பநாடு, ஆறுமுகநேரி, ஆத்தூர், குலசேகரபட்டினம், குரும்பூர், ஏரல், ஓட்டப்பிடாரம், கடம்பூர், கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு, கொப்பம்பட்டி, கயத்தார், மாசார்பட்டி, புதூர், எட்டயபுரம், நாசரேத், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 25 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 440 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய் 7, 690/- பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News