விழாக்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்க கோரிக்கை

Update: 2021-04-19 11:45 GMT

திருமணம் மற்றும் விழாக்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தூத்துக்குடி ஒலி ஒளி அமைப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடியில் ஒலி ஒளி அமைப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்கள் தொழில் செய்ய முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதனால் வாழ்வாதாரம் இழந்து கடந்த 6 மாத காலங்களாக எந்த ஒரு வருமானம் இல்லாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட திருமணம் மற்றும் விழாக்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News