வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மு.மு.க.சார்பில் நிவாரண உதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மு.மு.க.சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-12-25 18:24 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

திருச்சி மேற்கு மாவட்ட த.மு.மு.க. சார்பில் ம.ம.க. பொது செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ. ம.ம.க. மாநில அமைப்பு செயலாளர் காதர் மொய்தீன் ஆகியோர்களின் ஆலோசனையின் பேரில் மாவட்ட தலைவர் அ. பைஸ் அகமது தலைமையில் முதற்கட்டமாக தூத்துக்குடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலூகா கொட்டரகுறிச்சி, லட்சுமிபுரம், கொற்கை, சேதுக்குவாய்தான், அதிசியபுரம், சம்படி, பெத்தநாச்சி நகர், புதுநகர், மாரமங்கலம் ஆகிய கிராம புற மக்கள் மக்கள் பயன் பெறும் வகையில் ரூபாய் 8,00,000 மதிப்பீட்டில் 5 கிலோ அரிசி, பாய், போர்வை, பிரட், ஜாம் பிஸ்கட், பிரஷ், பேஸ்ட், பால் பவுடர், ஆணில் சேமியா, நூடுல்ஸ் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களை 1000 குடும்பங்களுக்கு வழங்கினார்கள்.

மணப்பாறை நகரம் சார்பில் தனி வாகனத்தில் வந்த ரூபாய் 2.50 மதிப்பிலான நிவாரண பொருட்கள் ஏரல் நகர நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

த.மு.மு.க. மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, ம.ம.க. மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், மாநில துணை செயலாளர் முகமது ரபீக், ஐடிவிங் மாநில துணை செயலாளர் பிரேம் நசீர், மாவட்ட துணை தலைவர் அக்பர், மாவட்ட துணை செயலாளர் அசாருதீன், அணி நிர்வாகிகள் பஜ்லூர் ரஹ்மான், முகமது தல்ஹா (எ) பாபு, அப்துல் ரஜாக், இலியாஸ், சிராஜ்தீன், பக்ருதீன், மணப்பாறை நகர தலைவர் இளையராஜா (எ) அக்பர், முகமது யூசுப் ஆகியோர் நிவாரண பொருட்களை அனைத்து கிராம பகுதிகளுக்கும் கொண்டு சென்று களப்பணியாற்றினர்.

Tags:    

Similar News