தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது

Update: 2021-04-15 06:15 GMT

தூத்துக்குடியில் தனுஷ் நடித்த கா்ணன் படம் வெளியான சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள சினிமா தியேட்டரில் தனுஷ் நடித்த கா்ணன் திரைப்படம் கடந்த 9ம் தேதி திரையிடப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் திரையரங்குக்கு படம் பார்க்க சென்ற இளைஞா்கள் சிலா் மது அருந்தியிருந்ததால் அவா்களை படம் பார்க்க அனுமதிக்காமல் திரையரங்கு நிர்வாகிகள் பணத்தை திரும்ப கொடுத்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞா்களில் சிலா் திடீரென தங்கள் பைக்கில் இருந்த பெட்ரோலை பாட்டில்களில் பிடித்து திரையரங்கு வளாகத்தில் வீசி விட்டு தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து தென்பாகம் போலீசில் திரையரங்கு நிர்வாகத்தினா் அளித்த புகாரின் அடிப்படையில் திரையரங்கில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட தென்பாகம் போலீசார் பெட்ரோல் குண்டு வீசியதாக தூத்துக்குடி ராஜீவ்நகா் 3வது தெரு பகுதியை சார்ந்த மிக்கேல் அந்தோணி அரவிந்த் (21), அந்தோணி ராஜ் (20), மருதநாயகம் (19), சுகுமார் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

Tags:    

Similar News