தூத்துக்குடியில் அக்.28 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 28ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2021-10-25 12:55 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 28ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான 'விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" 28.10.2021 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "முத்து அரங்கத்தில்" வைத்து நேரடியாக நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News