தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கபசுர குடிநீர் வழங்கல்
தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவுவதை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் தூத்துக்குடி ராஜீவ் நகர் 6வது தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சுரேஷ்குமார், தேவபாலன், காளிதுரை, மாரியப்பன், மாடசாமி, சேகர், சுரேஷ் உட்பட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.